Web Analytics

7 வது ஊதிய குழு தற்போதைய செய்தி

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு 2021

அறுவடை பண்டிகையான “பொங்கல்” கொண்டாடுவதற்கு, Ad-Hoc போனஸை வழங்க அரசு முடிவு செய்துள்ளது, இது அனைத்து ‘சி’ மற்றும் ‘டி’ குழுமத்தின் வழக்கமான மற்றும் தற்காலிக அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் மாதத்திற்கு 30 நாட்கள் அடிப்படையில் 30 நாட்கள் ஊதியங்களுக்கு சமமானதாகும். உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், சம்பளத்தின் வழக்கமான நேர அளவீடுகளில் ஆசிரியர்கள் மற்றும் முழுநேர சிறப்பு ரூ .1000 மற்றும் பகுதிநேர பணியாளர்கள் தற்செயல் / ஊதிய ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. ரூ .3000 ‘C’ மற்றும் ‘D’ குழு வழக்கமான வரம்புக்கு உட்பட்ட 30 நாள் ஊதியத்திற்கு இணையான 2018-19 கணக்கியல் ஆண்டிற்கான தற்காலிக போனஸ் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தங்கப் பத்திரத் திட்டம் 2021-22: மத்திய அரசின் தங்க பாத்திரத்தின் மீது முதலீடு செய்ய அறிய வாய்ப்பு!

தங்கப் பத்திரத் திட்டம் 2021-22 ( தொடர் 7) – விற்பனை விலை

மத்திய அரசு 2021 அக்டோபர் 21-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பு எண் 4(5)-B(W&M)/2021-ன்படி தங்கப் பத்திரங்கள் 2021 அக்டோபர் 25-ம் தேதி முதல் 29-ம்தேதி வரை விற்கப்படும். இது நவம்பர் 2-ம் தேதி அன்று வழங்கப்படும். தங்கப்பத்திரத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,765 விற்கப்படும் என ரிசர்வ் வங்கி 2021 அக்டோபர் 22-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மூலம் தங்கப்பத்திரத்தை வாங்குபவர்களுக்கும் கட்டணத்தை டிஜிட்டல் மூலம் செலுத்துபவர்களுக்கும் ஒரு கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி அளிக்க ரிசர்வ் வங்கியிடம் ஆலோசித்து முடிவெடுத்துள்ளது. இந்த முதலீட்டாளர்களுக்கு தங்கப்பத்திரத்தின் விற்பனை விலை ஒரு கிராமுக்கு ரூ.4,715 ஆக இருக்கும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 31% July 2021 முதல்!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கூடுதல் தவணை கடந்த ஜூலை 1ம் தேதி முதல் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கூடுதல் தவணை அளிக்கவும், ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிவாரணம் அளிக்கவும், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. விலை உயர்வுக்கு ஈடு செய்யும் வகையில், இது தற்போதைய 28 சதவீத அடிப்படை ஊதியம் / ஓய்வூதியத்திலிருந்து 3 சதவீதம் கூடுதலாக கடந்த ஜூலை 1ம் தேதி முதல் அளிக்கப்படும்.

ஏழாவது மத்திய ஊதிய ஆணையப் பரிந்துரை அடிப்படையில் இந்த அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வுக் காரணமாக, மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.9,488.70 கோடிச் செலவு ஏற்படும். இதன் மூலம் 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவர்.